மனிதர்கள் ஜாக்கிரதை

Greetings


கடவுள் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்....!

பூமியிலிருந்து வந்து - கடவுளின் 
செவிகளின் நுழைந்தது...!

பல அலறல்களின் சத்தம்...

எட்டிநின்றே பூமியை 
எட்டிப்பார்த்தான் கடவுள்...!

கூட்டமாய் சிலர் 
குட்டிச் சாலை ஒன்றில் 
ஒருவரை வெட்டிச் சாய்த்து கொண்டிருந்தனர்...!

இன்னொரிடத்தில் 
இளம்பெண்ணொருவள் இருகால் மிருகத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தாள்...!

மற்றொரிடத்தில் 
மனசாட்சியில்லாத மனித வெடிகுண்டொருவன் மரணங்கள் 
நிகழ்த்திக் கொண்டிருந்தார்...!

கடவுளின் மனம் படபடத்தது...!
அத்தனை பேரையும் 
காப்பாற்ற வேண்டும்

அவசரமாய் பூமியை
 நோக்கி ஓடினான்
பூமியின் வாசலில் 
வந்தவனுக்கு எச்சரிக்கை 
பலகையொன்று தென்பட்டது...!

அதை வாசித்த கடவுளோ
 அடுத்த நொடியே 
திரும்பிப் போனான்

எச்சரிக்கை பலகையில் 
எழுதப்பட்டிருந்தது...!! 
"மனிதர்கள் ஜாக்கிரதை".....! 

Comments