பெரும் பதற்றத்தோடு
வாசலில் காத்திருக்கும்
மனிதர்களில்லை
வலிகளை எல்லாம்
வாய் வழியே வெளியேற்றும்
அழுகை சத்தமும் இல்லை
மருத்துவ பெட்டிகளோடு அலையும் மருத்துவர்களும் இல்லை
நலமாயிருக்க வேண்டுமென்ற
பிரார்த்தனைகள் இல்லை
இனிப்பு பெட்டியோடு நிற்கும்
நண்பர்களும் இல்லை
ஆனால் இன்று பிறந்தது
காதலென்று!
Comments
Post a Comment