வெயிலுக்கும் நீ
குடைபிடித்தே நடக்கிறாய்...!
இல்லையென்றால்
வெளியில் நீ வரும்போதெல்லாம்
உன் முகம் கண்டே
உருகி சூரியன் மழை ஆகியிருக்கும்...!!
வெட்டவெளியில் விழும்
வெயில் நேர உன் நிழலில் தான்,
சூரியன் சில சமயம் வந்தமர்ந்து
சூட்டை தணித்து செல்கிறது
வெயிலில் நீ நடக்கையில் - உன்
நெற்றியில் உருண்டு
வெறும் பூமியில்
விழுகிறது வியர்வை
துளி ஒன்று...!
பெருமழை பெய்ததைப்போல்
குதூகலிக்கிறது பூமி...!!
வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ
விசிறியால் வீசிய தணிக்கிறது...!
உருவாகும் காற்றோ உன்
தேகம் தொடும்போதெல்லாம்
சூடாகிப் போகிறது...!
உச்சி வெயில் சூரியனை உன்
வெறும் கண்களால்
அன்றொரு நாள் பார்த்து....!
தாங்கமுடியாதா ஒளியால் தன்
விழி மூடிக்கொண்டது...!!
சூரியன்....
வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ
விசிறியால் வீசிய தணிக்கிறது...!
உருவாகும் காற்றோ உன்
தேகம் தொடும்போதெல்லாம்
சூடாகிப் போகிறது...!
உச்சி வெயில் சூரியனை உன்
வெறும் கண்களால்
அன்றொரு நாள் பார்த்து....!
தாங்கமுடியாதா ஒளியால் தன்
விழி மூடிக்கொண்டது...!!
சூரியன்....
Comments
Post a Comment